Header Ads



அமெரிக்க தூதரகம் உண்மைக்கு, புறம்பான விடயங்களை தெரிவித்துள்ளது - ஹெகெலிய


எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ள அனைத்து விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை என ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இதனை தெரிவித்துள்ள ரம்புக்வெல தூதுவர் ஒருவர் வெளியிடும் அறிக்கைகள் உண்மையானவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது இவ்வாறான பல அறிக்கைகள் வெளியாகியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நியமித்துள்ள குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை படித்துபார்ப்பதன் மூலம் அமெரிக்கா தெரிவிப்பது உண்மையா என்பதை அறிந்துகொள்ள முடியும் என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எம.;சி.சி உடன்படிக்கை குறித்து கவலைப்படதேவையில்லை இரகசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இறுதியில் உண்மை தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.