Header Ads



பொதுஜன பெரமுன குழு மோதல் - பொறுமையுடன் செயற்பட பிரமதர் அறிவுரை, தேர்தல் பிரச்சாரத்தில் சம்பவம்

பொதுஜன பெரமுனவின் இரு குழுவினர் மத்தியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்தமோதல் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வெல்லவாய அமைப்பாளர் உரையாற்றிக்கொண்டிருந்தவேளை இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் வெல்லவாய அமைப்பாளரின் மகன் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் ஆதரவாளர்களை பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தங்கள் மத்தியில் மோதிக்கொள்ளக்கூடாது ஏனையவர்களுக்கு முன்னுதாரனமாக அவர்கள் விளங்கவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனக்கு அரசியலில்; ஐம்பது வருட அனுபவம் உள்ளது. தயவு செய்து நான் சொல்வதை செவிமடுங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.