Header Ads



திகாமடுல்ல குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் - இதுவே முதல் தடவை, அயாய சங்கு ஊதுகிறது கபே


கிழக்கில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய பகுதிகளில் மேலதிக தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தப்போவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பாள கபே தெரிவித்துள்ளது.

திகாமடுல்லயில் 15 ஆபத்தான பகுதிகளை இனம் கண்டுள்ளதாக கபே தெரிவித்துள்ளது.

அக்கரைப்பத்து,பொத்துவில் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளே அதிகளவு ஆபத்ததான பகுதிகளாக காணப்படுகின்றன என கபே தெரிவித்துள்ளது.

திகாமடுல்லயில் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுபவர்கள் காணப்படுகின்றனர் கபே தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் அதிகளவு போலிச்செய்திகள் காணப்படுகின்றன பகைமையை தூண்டும் பேச்சும் அதிகரிக்கின்றது என கபே தெரிவித்துள்ளது.

பகைமையை ஊக்குவிக்கும் பாடல்கள் ஒலிக்கின்றன, இவ்வாறான விடயத்தை நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 3:103)

    ReplyDelete

Powered by Blogger.