Header Ads



உடல் பெருத்து இருப்பதால் பயனில்லை, தலைக்குள் மூளை இருக்க வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர், தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சித்து, ஐக்கிய தேசியக்கட்சியின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகல் - பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாகவே அரசியலுக்கு வந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தயவு காரணமாகவே அவர்கள் இந்த இடத்தில் உள்ளனர். அவர்களே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அதன் பிரதிநிதிகளை அவமதித்து வெட்கமின்றி நடந்துக்கொள்கின்றனர்.

கம்பஹா பிரதேசத்தில் வயிறு மற்றும் உடல் பெருத்த நபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் கூறுவதை கண்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்துக்கொண்டு, பொதுஜன பெரமுனவில் வாக்கு கேட்கும் எங்களை பற்றி தானே அவர் கூறுகிறார். ஏன் இப்படி மறைத்து கூற வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலருக்கு ஐக்கிய தேசியக்கட்சியுடன் அரசியல் உடன்பாடு உள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், ஐக்கிய தேசியக் கட்சியை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என்ற கனவு சிலருக்கு இருக்கின்றது.

இதன் காரணமாவே எங்கள் மீது சேற்றை வாரி வீசுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தத்தையே அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரான எங்களை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ பிரச்சினையில்லை. இதன் காரணமாகவே வெறுமனே கத்தி கூப்பாடு போடுகின்றனர்.

ஊடகங்கள் ஊடாக முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்து, எம்மீது சேறுபூசி, அரசியலில் சிறுப்பிள்ளை தனத்தையும் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் அவர்கள் நாட்டுக்கு காட்டி வருகின்றனர்.

உடல் பெருத்து இருப்பதால் பயனில்லை, தலைக்குள் மூளை இருக்க வேண்டும். மூளை இல்லாதவர்களே இப்படியான வேலைகளை செய்வார்கள்.

எதிர்வரும் தேர்தலில் இவர்கள் குறித்து மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உங்கள் மூளையின் பருமனும் முகத்தில் நன்றாகத் தெரிகிறது.

    ReplyDelete
  2. SAJITHUDAYA MOOLAI, SHINNA MOOLAI,
    ATHANAALTHAAN, VAAIKU VANDATHAI ELLAAM
    ULARUKIRAAR. PAAVAM.
    APPADIENRAAL, UDAN THIRIPAVARKALIN, MOOLAIAI PATRI KETKAVUM VENDUMAA?
    VENDUMAA??

    ReplyDelete

Powered by Blogger.