Header Ads



கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தமது, ஆதரவினை ஆளுங்கட்சி பக்கம் திருப்பியுள்ளனரா...?

- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் -

தன்னுடைய வாழ்க்கைத்துணை என்றாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில சந்தர்ப்பங்களில் நாட்டின் தலைவர்கள் தமது தீர்மானங்களை மாற்றிக் கொள்வார்கள். நம் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மக்களோடு மக்களாக இணைப்பு ஏற்படுத்தும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கின்றார். அவர் வாகனத்தில்  செல்லும்போது பாதை ஓரங்களில் தன்னை வரவேற்க காத்திருக்கும்மக்களுக்கு கையசைத்துவிட்டு சென்றாலும் ஒரு சில இடங்களில் மக்களோடு மக்களாக இறங்கி  அவர்களுடன் உரையாடுவார்கள். எந்த இடத்தில் இறங்குவது எந்த இடத்தில் கையசைத்து செல்வது என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவாகும். அந்த பிரிவின் தீர்மானம் எவருக்கும் அறிவிக்கப்படவும் மாட்டாது. யாருமே எதிர்பார்க்காத ஒரு இடத்தில் சில நேரத்தில் ஜனாதிபதி அவர்கள் இறங்குவார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடியே சகல காரியங்களும் நடைபெறும்.

கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி அவர்கள் உடுநுவர தேர்தல் தொகுதிக்கு விஜயம் செய்தபோது எலமல்தெனிய பிரதேசத்தில் இறங்கவில்லை என்பதை வைத்து பலரும் பல விதமான வீடியோக்களையும் விமர்சனங்களையும் செய்கின்றார்கள். மொட்டின் வேட்பாளர் பாரிஸ் இருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான நட்பை பற்றி கேட்கின்றார்கள் .என்னதான் நட்பு என்றாலும் நாட்டின் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தீர்மானங்களில் நட்பை பயன்படுத்த முடியாது.

இந்த வீடியோக்களால் அவர்கள் என்ன செய்தியை மக்களுக்கு சொல்ல முனைகிறார்கள்?. ஆளும் கட்சி மீதான முஸ்லிம் மக்களின் ஆதரவு இன்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது .குறிப்பாக கண்டி மாவட்ட முஸ்லிம்கள் கடந்த காலங்களை போலல்லாது தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவருமே தோல்வியடையும் அளவுக்குத் தமது ஆதரவினை ஆளுங்கட்சி பக்கம் திருப்பியுள்ளனர். உலமாக்கள் பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ,அரசு ஊழியர்கள் ,வர்த்தகப் பிரமுகர்கள் என்று எல்லோரும் ஒன்றிணைந்து ஆளும் மொட்டுக் கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இதனை தாங்கமுடியாத ஒரு சில புல்லுருவிகள் தான் மக்களை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான கீழ்த்தரமான பதிவுகளை இட்டு மீண்டும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் ..ஆனால் மக்கள் ரசனைக்காக இவற்றை பார்த்தாலும் அவர்களின் உள்ளங்களில் ஆளும்கட்சி மீதான தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தயாரில்லை. கேவலம் இந்த வீடியோவை தயாரித்தது எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு தேசியத் தலைவரின் கையாள் என்பதாகும். அவர் முகப்புத்தகத்தில் வேறு பெயர்களில் உலா வந்தாலும் யார் என்பதை அவருடன் இருக்கும் எமது கட்சிக்காரர் மூலம் தெரியவந்தது. இவற்றால் தளரும் கூட்டம் அல்ல நாங்கள். 

இவையெல்லாம் அரசியலில் சாதாரண விடயம். இதைவிட பலமடங்கு  வீடியோக்கள் பதிவுகள் தேர்தல் நெருங்கும் போது வரும் என்றும் எங்களுக்குத் தெரியும் . ஆனால் மக்களின் உள்ளங்களை இவற்றால் மாற்ற முடியாது. நாங்கள் சமூக நன்மையை மையமாக வைத்தே ஆளும் கட்சிக்கு ஆதரவு கோருகின்றோம். அந்த ஆதரவினை உறுதிப்படுத்த முஸ்லீம் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறுகின்றோம். இதிலே எமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. முஸ்லிம் மக்கள் இவ்வாறான சிறிய கீழ்த்தரமான விடயங்களுக்கு சோரம் போகமாட்டார்கள்.எமது வெற்றிப் பயணத்தில் இணையுமாறு எல்லோரையும் மீண்டும் அழைக்கின்றோம். இது பாராளுமன்றத்தில் கதிரையை சூடாக்க செல்லும் பயணம் அல்ல சமூகத்தின் எதிர்காலத்தை மையமாகக்கொண்டு நடாத்தும் ஒரு போராட்டம் என்பதை மறந்து விட வேண்டாம்.

5 comments:

  1. SLPP Candidate A.L.M. Faaris should be unanismously voted to represent Kandy district as a new Muslim MP of the SLPP/Mahinda/Gotabaya new government on August 5th., 2020, Insha Allah.
    The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Kandy district too, Insha Allah. Rauf Hakeen has already complained that the Muslims are moving away from the SLMC and this has become a "craze" in the Muslim supported SLMC areas.
    The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” and the SLMC have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” or the SLMC, ACMC and NUA leaders anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections to be held on August 5th., 2020, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition”/"SLPP to power. THEY WILL VOTE MAHINDA RAJAPAKSA TO BECOME THE NEXT PRIMEMINISTER OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST MAHINDA RAJAPAKSA AND GOTABAYA RAJAPAKSA TO CREATE A NEW MUSLIM POLITICAL CULTURE TOO in Sri Lanka, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2015 முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய முஸ்லிம் ஒழுங்கமைக்க இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. இவர்கள்தாம் தம்மை எரிக்கத் தாமே வாக்கு(மூலம்) கொடுப்பவர்கள்.

    ReplyDelete
  4. சட்டத்தரணி போல்தானா இவர் எழுதியிருக்கிறார்.100% மே கோத்தாவுக்கு பாலி பிடிக்கிறார்.பாவம் அந்த பாரிஸ் ஹாஜியார் கூட்டத்தை எப்படியோ கூட்டி,மதரஸா மானவர்களை அழைத்து வந்து,சிறிமி ஒருவரை மாலை அணிவிக்க த்யார் நிலையில் வைத்து நீங்கள் சொல்லும் மக்கள் ஆதரவு நிறைய்ப் பெற்றுள்ளவரை கெளரவித்து ஒரு இரண்டு நிமிடம் இறங்கிப் போனால் என்னதான் ஆகும்.இந்த அரசு முஸ்லிம்களை கெளரவிக்கும் நிலை இதுதான்.அரசு முஸ்லிம்களை வேண்டாம் வேண்டாம் என்கிறார்கள்.நீங்கள் வெட்கமின்றி பின்னால் சுற்றுகிறீர்கள்.வெட்கம்கெட்ட ஜென்மங்கள்.

    ReplyDelete
  5. 60,000 UYIRKALAI UYIRODU TYRE
    POTTU, THEEYIL ITTA SAJITHUDAYA
    APPANUDAYA SHEYALAI, IVALAVU
    SHEEKKIRAMAAKA, MARANDAVAKALUKKU
    NAAPAKAPADUTHA VIRUMBIKIREN.

    ReplyDelete

Powered by Blogger.