Header Ads



சஜித்தின் மனைவியால், ஹிருணிகா ஓரங்கட்டப்படுகிறாரா..?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவின் மனைவி ஜலானியினால் தான் கட்சிலியிருந்து ஓரங்கப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர நிராகரித்துள்ளார்.

சஜித்பிரேமதாசவின் மனைவி என்னை ஓரங்கட்டவில்லை மாறாக கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பணியை எனக்கு வழங்கியுள்ளார் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியின் மகளிர் அணியின் கொழும்புமாவட்ட பிரிவுக்கு நான் தலைமை தாங்கவேண்டும் என்ற யோசனையை அவரே முன்வைத்தார் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களிலும் முக்கிய ஊடகங்களிலும் ஒரு வீடியோ வெளியானiதை தொடர்ந்து ஜலானி பிரேமதாச என்னை துரத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உங்களை இம்முறை மக்கள் நிராகரிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.