பொலிவியா ஜனாதிபதியையும் கொரோனா பீடித்தது
பொலிவியாவின் ஜனாதிபதியான ஜீனைன் அனெசுக்குக் (Jeanine Anez) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ”தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்னதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
Post a Comment