என்னுடன் எடுத்த புகைப்படங்களை, தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள்
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் கடந்தகாலங்களில் எடுத்துக்கொண்ட படங்களை சில வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது குறித்து பேராயர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
என்னுடன் சேர்ந்து முன்னர் எடுத்துக்கொள்ளப்பட்ட படங்களை சில வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர் என எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எனது சம்மதம் இன்றி அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என பேராயர் தெரிவித்துள்ளார்.
நானோ அல்லது கொழும்புமறைமாவட்டமோ எந்த அரசியல்கட்சிக்கும் ஆதரவு வெளியிடவில்லை,அல்லது தேர்தல் ஆதாயமபெற நினைக்கும் எந்த குழு அல்லது அமைப்புடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் மனச்சாட்சியின் விருப்பத்துக்கு ஏற்ப தனது வாக்குரிமையை பயன்படுத்துவது ஒவ்வொரு பிரஜையினதும் மாற்றமுடியாத உரிமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment