என்னுடன் இப்போதே இணையுங்கள் - 5 ஆம் திகதிக்கு பின்னர் இணைவதில் பயனில்லை
தன்னுடன் இணைந்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையாமல் இருப்பவர்களுக்கு இணைந்துக்கொள்ள காலம் இருக்கின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பின்னர் இணைவதில் பயனில்லை. வருவதென்றால் தற்போதே வர வேண்டும். அர்ப்பணிப்புகளை செய்த அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தமான பொறுப்பை நான் ஏற்பேன்.
அரசாங்கம் ஒன்றை அமைத்து அடுத்து நடத்தப்படும் மாகாண சபைத் தேர்தலின் போது தற்போது உள்ளூராட்சி சபைகளில் இருக்கும் திறமையான பிரதிநிதிகள் அரசியல் ஏணியில் முன்நோக்கி செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment