Header Ads



யாழ்ப்பாணத்தில் வேட்பாளர், இன்றையதினம் மாரடைப்பினால் மரணம்

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்பபுலிகள் மக்கள் பேரவை சார்பாக போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் இன்றைய தினம் -15- மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் எனும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இம்முறை இடம்பெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேட்சைகுழு 14 இல் இலக்கம் ஒன்றில் போட்டியிடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலிற்கான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.