இலங்கைக்கு 1,360 மில்லியன் ரூபா நன்கொடை வழங்க ஜப்பான் நடவடிக்கை
கொரோனா தடுப்பு செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு 1,360 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்குவதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் திட்டத்திற்கு மேலதிகமாக நன்கொடையாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான பரிமாற்றல் ஆவணங்களில் நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர்.
இதன் கீழ், கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment