Header Ads



மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – CEB


கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவல் காணமாக நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தமையால் மின் பாவனையாளர்கள் அவர்களின் மின் கட்டணங்களைச் செலுத்த வாய்ப்பின்மையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு காரணங்களுக்காகவும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் பாவனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டணங்களைப் பல தவணைகளாகச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டண பட்டியல் சரியானது என அதன் தலைவர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நுகர்வோர் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.