Header Ads



அளுத்கம தாரிக் அஹமட் மீதான தாக்குதலை, கடுமையாக கண்டிக்கிறார் நாமல்

அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும், அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.

பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

தற்போதே இந்த செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்த தெரிவித்துள்ளார்.

Namal Rajapaksa
@RajapaksaNamal
 I strongly condemn those involved in the abuse of #ThariqAhamed & support a full inquiry into the matter. It's sad that the excellent work done by @SriLankaPolice2 during the #COVID19SL pandemic is now questioned after this. #SriLanka #lka #JusticeForThariq

No comments

Powered by Blogger.