Header Ads



சஜித் வற்புறுத்தியதால், மெல்கம் ரஞ்சித்தை சந்தித்தேன் - தன் கையால் குறை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் - ஹரின்

பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்துத் தான் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் உண்மைதான் என்பது எனது இதயத்திற்குத் தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டில் வேட்பாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆனால், அந்த கருத்தால் தனது கட்சியின் கத்தோலிக்க அமைச்சர்களுக்குப் பாதகமாக நிலை ஏற்படும் என கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வற்புறுத்தலின் பேரில் தான் பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் சந்திக்கச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச என்னை தனியாக அழைத்துப் பேசினார். அத்தோடு பேராயரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியமையால் முடியாது என சொல்லத் தயக்கத்தால் தான் அங்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற பொது பேரணியில் அவர் தெரிவித்தார்.

பேராயர் தனது மதத் தலைவராக இருந்தபோதிலும், அவருக்கும் எனக்கும் பிரச்சினைகள் இருந்தபோதிலும், சஜித் பிரேமதாச தற்போதைய நிலைமையை தனக்கு விளக்கினார் என அவர் தெரிவித்தார்.

பேராயருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தன்னுடைய கையால் குறை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாக ஹரின் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.