Header Ads



தர்காநகர் முஸ்லிம் இளைஞன், தாக்கப்பட்டதற்கு சங்கக்கார கண்டனம்

அலுத்கம தர்கா நபர் பகுதியில் காவல்துறையினரால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க ஓர் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது அனுமதிக்கப்படக்கூடியதல்ல எனவும் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.