Header Ads



திலங்கவுக்கு மஹேல பதிலடி


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக கூறிய விடயம் சம்பந்தமாக கிரிக்கெட் வீரர்கள் அவசியமின்றி குழப்பமடைய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியிருந்தார்.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

“ போட்டி காட்டிக்கொடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில்லை என்றால் சில கிரிக்கெட் வீரர்கள் மாத்திரம் ஏன் குழப்பமடைந்து டுவிட்டரில் கருத்துக்களை பதிவிடுகின்றனர். ஏன் அவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றனர்” என சுமதிபால குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் திலங்க சுமதிபால வெளியிட்டிருந்த இந்த கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

“ நான் வருத்தப்படுகிறேன். அடுத்த முறை தொப்பியை போட்டுக்கொள்ளும் முன்னரும், பதிலளிக்கும் முன்னரும் அவரிடம் கேட்டறிய நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். அந்த துறை சம்பந்தமாக அவருக்கு பெரிய அனுபவம் இருப்பதே இதற்கு காரணம்” என மஹேல ஜயவர்தன தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இலங்கையில் பிரபலமான குதிரை பந்தயம் உட்பட பந்தயங்கள் தொடர்பான வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.