Header Ads



மன்னிப்பு கோரியுள்ள சஜித்


முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தேர்தல் மேடை ஒன்றில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்பாக நிகழ்த்திய உரைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார். 

முன்னாள் அமைச்சரின் மேற்படி உரை பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்  மனதை காயப்படுத்தி இருக்குமெனில், அந்த உரையை நிகழ்த்தியமை தொடர்பாக ஹரீன் சார்பில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவறுகள் இடம்பெறும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை தவறுகளை திருத்திக்கொள்ள தான் முன்நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.