Header Ads



எனது அரசாங்கத்தின் கீழ் மரிக்காருக்கு, உயர் அமைச்சர் பதவியை வழங்குவேன் - சஜித்


தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால்  இயக்கப்பட்ட அமைச்சரவையில் ஆறில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே எங்களுக்குக் கடந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கியதாக ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆகட்ஸ்  5 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரதமராகப் பதவியைப் பொறுப்பேற்று ​தனது தந்தையின் முழு அமைச்சகத்தையும் கையகப்படுத்தி வீட்டுப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பொது பேரணியில் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சத்தி சட்சியின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பாளர்  எஸ்.எம்.மரிக்காருக்கு தனது அரசாங்கத்தின் கீழ் ஒரு உயர் அமைச்சர் பதவியை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.


1 comment:

  1. POIYAN, PAKATKANAVUKANDUKONDU
    ALANJI THIRIKIRAAN. SARATH FONSEKAVUKKUM, AMAICHU PATHAVI KODUTHAAN ALLAVAA,
    ATHEY PONRU MARIKARUM KODUKKIRAAN.

    ReplyDelete

Powered by Blogger.