கடந்த பாராளுமன்றத்தில் எப்படிப்பட்டவர்கள், எல்லாம் இருந்தார்கள் தெரியுமா..?
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த பிரதிநிதிகளில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர் இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ரஞ்சன் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்ற 100 பேர், மணல் அகழும் அனுமதியை பெற்ற 75 பேர், போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், குதிரை பந்தயம் நடத்தும் ஒருவரும் இருந்தார்.
புகையிரதங்களில் சங்கிலி பறித்த ஒருவரும் இருந்தார். இதுவே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்தவர்களின் தகுதி. இவ்வாறான நிலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகின்றனர்.
அதிகாரம் இல்லாத போதே இவர்கள் இப்படி செய்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி என்ன நடக்கும்? எனவும் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment