பேருவளையில் இருந்து இம்முறை, மர்ஜான் பளீல் பாராளுமன்றம் செல்லவுள்ளார் - பியல் நிசாந்த
சலுகைகள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என பியல் நிசாந்த தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் அவர் தர்ஹா நகர் மெஜஸ்டிக் திருமண மண்டபத்தில் விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தேர்தல் காலம் வந்துவிட்டால் தர்ஹா நகரில், பலர் என்னை விசமக்கண் கொண்டு பார்க்கின்றனர்.
தர்ஹா நகர் மக்களுடன் எனக்கு நிறையத் தொடர்புகள் உள்ளன. இம்மக்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி உட்பட எந்தவொரு தேவைகள் இருந்தாலும் என்னைச் சந்தித்து தீர்வு காண முயலுங்கள்.
இம்முறை சிறந்ததோர் சந்தர்ப்பம் பேருவளை மக்களுக்கு கிடைத்துள்ளது.
மர்ஹும் ஐ.ஏ.காதருக்குப் பிறகு பேருவளையில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் தேசிய பட்டியல் மூலம் எனது நீண்டகால நண்பன் மர்ஜான் பளீல் பாராளுமன்றம் செல்லவுள்ளார். தெருக்களிலும் வீதிகளிலும் பேசிப் பேசிக் காலத்தை கழிக்காமல் ஏதிர்கால சந்ததிகளின் கல்வி மறுமலர்ச்சி மற்றும் விமோசனத்திற்காக நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றார்.
(எம்.பாஸி ஸுபைர்)
என்னத்தைச் சொல்லி என்னததைச் செய்ய. இலங்கை முஸ்லிம் சமுதாயத்திடம் பிச்சை வாங்கியே காலத்தைக் கழிக்கும் பழக்கம் மிதமிஞ்ஞிவிட்டது. அதிலும் ஒரு பெரும் சுகமும் ஆரவாரமும்.
ReplyDelete