சுகாதார தேர்தலை விதிகளை மீறினால், நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் சுகாதார பரிசோதர்களுக்கு
சுகாதார பாதுகாப்பு நடைமுறை விதிகளுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிலுள்ள விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் பொது மக்கள் சுகாதார பரிசோதர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பாதுகாத்து தேர்தலை நடத்துவதற்கான பல பரிந்துரைகள் சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகள் அடங்கிய வர்த்மானி அறிவிப்பை வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக சகாதார அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்
Post a Comment