Header Ads



ஞாயிற்றுக்கிழமை சுனில் ஜயவர்த்தனவின் இறுதி சடங்குகள்


இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்த்தனவின் இறுதி சடங்குகள் நாளை மறுதினம் -14- இடம்பெற ஒள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இறுதி சடங்கு நடவடிக்கைகள் கெஸ்பேவ பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இவரது கொலையுடன் தொடர்புடைய குத்தகை மற்றும் வாகன கடன் வசதிகளை வழங்கும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் குறித்து பிரத்தியேக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனத்தின் உரிமையாளரால் வழங்கப்பட்ட உத்தரவு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மிரிஹான உள்ளிட்ட பல பகுதிகளில் செயற்பட்டுள்ள குத்தகை மற்றும் வாகன கடன் வசதிகளை வழங்கும் குறித்த நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.