Header Ads



பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு, பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் - சீ.பீ.ரத்நாயக்க

2020 பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என்று நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்தார்.

பூண்டுலோயா கலப்பிட்டிய பகுதியில் இன்று -27- இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தேர்தல் களமும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றம் செல்லவுள்ளனர். எனவே நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறுவோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. எனவே, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. முஸ்லிம்கள் சாம்பலாகத் தயார் என்றால் மாத்திரமே இது சாத்தியம்!

    ReplyDelete

Powered by Blogger.