Header Ads



தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு, நடவடிக்கை துரித எடுக்க வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மேலும், பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் அனைத்து இன மக்களின் ஆதரவு அவசியம். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை கொண்டு பொதுத்தேர்தலின் வெற்றியை மதிப்பிட முடியாது.

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எவ்வித் தடையும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பிறகு  சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.