Header Ads



A/L பரீட்சையை பிற்போடுங்கள் - ரவி கோரிக்கை

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை அரசாங்கம் பிற்போடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த பரீட்சை எதிர்வரும் செப்டம்பரில் நடத்தப்படுவதற்கு மீள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பாடவிதானங்கள் நிறைவுசெய்யப்படாத நிலையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே உயர்தரப் பரீட்சைகளை நவம்பர் அல்லது டிசம்பருக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழங்களும் இறுதியாண்டு பரீட்சைகளுக்காக 2020, ஜூன் 22 இல் மீள்திறக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.