Header Ads



79 லட்சம் ரூபா கொள்ளையை முறியடித்த, பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அண்மையில் நடந்த பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை தடுத்து, சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள புத்த ஜயந்தி மாளிகைக்கு அருகில் கடந்த 11 ஆம் திகதி டிபெண்டர் வாகனத்தில் மோதுண்டு அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 லட்சம் ரூபாவை மருத்துவர் ஒருவர் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போது, உயிரிழந்த இந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் மற்றும் பொலிஸ் அதிகாரியும் இணைந்து சந்தேக நபரை கைது செய்ததுடன் பணத்தையும் கைப்பற்றினர்.

No comments

Powered by Blogger.