நாடளாவிய ஊரடங்கு சட்டம் இன்றுமுதல் நீக்கம்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று -28- முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் தளத்தப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment