வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய சில தகவல்கள்
நாட்டிற்குள் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யும் போது, நாட்டில் உள்ள வெளிநாட்டு கையிருப்பு இறக்குமதிக்கு பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக ஏற்றுமதி மூலம் பெறப்படும் பணம் அதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் எப்போதும் கையிருப்புக்களிலிருந்து இறக்குமதி செய்வதில்லை என்பதை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். கையிருப்புக்களிலிருந்து இறக்குமதி செய்தால், எங்கள் கையிருப்பு இறக்குமதிக்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் எங்கள் கையிருப்பு சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஆனால் நாங்கள் வருடத்திற்கு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்கிறோம். எனவே, கையிருப்புக்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.
இந்தப் பிரச்சினை பெரும்பாலும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் எழுகிறது. வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, வாகனங்கள் கையிருப்புக்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. வாகனங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் ஏற்றுமதியிலிருந்து நாம் பெறும் பணத்திலிருந்தும், சுற்றுலா சேவைகள் மற்றும் நமது வெளிநாட்டு பணம் அனுப்புதலிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்டால், அந்த இறக்குமதி வெளிநாட்டு கையிருப்புக்கள் மூலம் செய்யப்படுவதில்லை.
இருப்பினும், தேவைப்பட்டால், அதை கையிருப்புக்கள் மூலம் செய்யலாம். ஆனால் அதை அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை."

Post a Comment