Header Ads



சகல குடும்பங்களும் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்குவேன் - சஜித்

இம்முறை பொதுத் தேர்தலில் நான் ஆயிரம் பேரணிகளில் உரையாற்றுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைகள் முடிந்தால் பேரணிகளில் உரையாற்றி என்னுடன் போட்டியிட்டுக் காண்பிக்கவும் என சால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறும் பொது தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என தெரிவித்தார்.

இந்த நாட்டில் அனைத்து குடும்பங்களும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வரை மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்குவதாக கம்பாஹாவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரித்தார்.

அத்துடன், ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமையால் குறித்த 45 நாட்களில் ஆயிரம் பேரணிகளில் உரையாற்றுவதாக சஜித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆயிரம் பேரணிகளில் உரையாற்றுவது என்றால் ஒரு நாளைக்கு 22 பேரணிகளில் உரையாற்றவேண்டும்.

No comments

Powered by Blogger.