Header Ads



ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை, பஸ்கள் ஏற்றினால் 1955 இலக்கத்திற்கு முறையிடுங்கள்

ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார். 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து இது தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமை காரணமாக பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள போதும் சில தனியார் பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.