Header Ads



பள்ளிவாசல்களை ஜுன் 15 ஆம், திகதியே திறக்க முடியும்


பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மதஸ் தலங்களையும் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதியே திறக்க முடியும் என சுகாதார அமைச்சு இன்று (02) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலினை அடுத்து நாட்டில் மூடப்பட்டிருந்த மதஸ் தலங்கள் எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்து மதஸ் தலங்களையும் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதியே திறக்குமாறு சுகாதார அமைச்சு இன்று அனைத்து சமய விவகார திணைக்களங்களிற்கும் அறிவித்துள்ளது.

 விடியல் 

No comments

Powered by Blogger.