Header Ads



பொதுஜன பெரமுனவுடன் 1000 ஐ.தே.க உறுப்பினர்கள் இணைவு

- எம்.கிருஸ்ணா -

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நாவலப்பிட்டி பிரதேச சபைத்தலைவர், பிரதேசசபை உறுப்பினர்கள் 12 பேர் என ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று 30ஆம் திகதி இணைந்துக்கொண்டனர்.

கங்கே இஹல பிரதேச சபைத் தலைவர், பஸ்பாகை கோரளை தலைவர், நாவலப்பிட்டி நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பிரதேச, நகர சபை உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்படி 300 பேரும் பச்சைநிற தொப்பி அணிந்து ஊடக சந்திப்பை நடத்தி ஆதரவை பொதுவாக அறிவித்து விட்டு, மகிந்தானந்த அளுத்கமகேயுடன்; கைகோர்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொப்பியை அணிந்து ஆதரவளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.