பிரதமர் மகிந்த தலைமையில் நடந்த கூட்டம் - TNA யும் பங்கேற்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் இதன் போது பதிலளிக்கப்படும் எனவும் பிரதமரின் செயலகம் கூறியுள்ளது.
Post a Comment