ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு CID க்கு நீதிவான் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதின்றின் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன அறிவித்தார்.
அத்துடன் இது தொடர்பாக கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜெயரட்னவுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையிலேயே நீதிமன்றின் முன்னிலையில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜெயரட்னவினால் சி.ஐ.டி.க்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment