Header Ads



ராஜிதவிற்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை தற்போது கேள்விக்குற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட  ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் முன்னெடுத்த தேர்தல் பிரச்சாரங்கள் வெறுக்கத்தக்கதாக காணப்பட்டன.

வெள்ளை வேன் விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு எதிராக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு சோடிக்கப்பட்டது என்பது ஆதாரபூர்வமான வெளிக்கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து  ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதன் பின்னர் இவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்த வண்ணம் பிணை பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு வழங்கப்பட்ட பிணை தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்களை செயற்படுத்திக் கொள்ள அரசாங்கம் சுயாதீன தாபனங்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாது.

ஆகவே பாரதூரமான குற்றஞ்சாட்டை  தொடுத்த முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித  சேனாரத்னவிற்கு  உரிய தண்டனை கிடைக்கப் பெற வேண்டும். இவ்விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என்றார்

2 comments:

  1. The political "SATAN" (Seithan) who distroyed the PEACE of the Muslim community in Sri Lanka since June 14th., 2014 Aluthgama riots onwards.
    God AllMighty Allah will defenitely bring out the "TRUTH" and destroy this evil enemy of the Muslim Community before the "Rule-of-Law" and expose all his accomplices, be they Muslim leaders and politicians or others, Insha Allah. As it is now a matter of "sub-judice", "The Muslim Voice" will not comment further on it, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. உங்களுக்கு உரிய சரியான தண்டனை கிடைக்க மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். உங்கள் விளையாட்டுக்களை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.