Header Ads



கொரோனா தொற்று - இலங்கையர் லண்டனில் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையர ான லோகசிங்கம் பிரதாபன் லண்டனில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட பிரதாபன் லண்டனில் செயற்பட்டு வரும் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தில் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2ம் திகதி லண்டனில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.