கொரோனா சமூக ரீதியில் பரவுவதை தடுக்க முடியும் - பவித்ரா
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால், நோய் பரவலை கட்டுப்படுத்த பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற பிற சுகாதார பழக்கங்களை இன்னும் பல மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment