"கொரோனாவை ஒழிப்பதில் காட்டிய துணிச்சலுக்காக, மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள்"
கொரோனா வைரசை ஒழிப்பதில் அரசாங்கம் காட்டிய துணிச்சலுக்கு நன்றி செலுத்தும் வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பார்கள் என அந்த கட்சியின் வேட்பாளரான பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜயசுமன இதனை கூறியுள்ளார்.
கொரோனா ஒழிப்புக்கு நாட்டுக்கு மக்களில் பெரும்பாலானோரின் ஒத்துழைப்பு கிடைத்தது. கொரோனா ஒழிப்பில் அரசாங்கம் காட்டிய துணிச்சலுக்காக எதிர்வரும் தேர்தலில் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிக்காட்டி தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என நாங்கள் நினைக்கின்றோம்.
ஜனாதிபதி வழிநடத்தி வரும் அரசியல் சக்தி, அவர் வழங்கிய தலைமைத்துவத்திற்கு கீழ்ப்படிந்தவர்களுக்கு நாட்டு மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள். தேர்தல் நடத்தும் திகதி முக்கியமல்ல. நாங்கள் தற்போது கொரோனா ஒழிப்புக்கே முன்னுரிமை வங்கியுள்ளோம் எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
So there's no valid reason
ReplyDelete