Header Ads



ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து போட்டியிட இரகசிய பேச்சு

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை செல்லுப்படியற்றதாக்கவே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்ட  அழுத்தம் கொடுக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு செல்லுப்படியற்றது என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். 

அத்துடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தற்போது இரகசிய பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் முன்னெடுக்கின்றார்கள். இதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு அங்கிகரித்த வேட்பு மனுக்களை கேள்விக்குட்படுத்துகின்றார்கள்.

தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக் கொண்ட வேட்பு மனுவை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. பாராளுமன்றத்துக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உண்டு.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினருக்கே பெரும்பாலான ஆதரவு உண்டு. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்பட்டால் நிச்சியம் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவை ஐக்கிய தேசிய கட்சியினர் இரத்து செய்வார்கள்.

இதன் பிறகு பொதுத்தேர்தலுக்கு மீண்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் . அப்போது இரு தரப்பினரும் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்யவே பாராளுமன்றத்தை கூட்டுமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள்.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் மக்களாணையினை இனியொரு போதும் பெற முடியாது. ஐக்கிய தேசிய கட்சியினை மக்கள் இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுடன் புறக்கணித்து விட்டார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.