Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, விமல் வீரவன்ச புகழாரம்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என சிறு, நடுத்தர வணிக மற்றும் நிறுவன மேம்பாடு, தொழில் வழங்கல் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று -06- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த  நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் 5000ம் ரூபா நிவாரண தொகை வழங்கியுள்ளது.

இதனையும் எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அரசாங்கம் 20000 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும். என்று குறிப்பிடுகின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தில் இயற்கை அனர்த்தினாலும், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நட்ட ஈடு ஏதும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் உள்ளவர்கள் அரசாங்கத்தை தற்போது விமர்சிப்பது நகைப்புக்குரியது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்தரப்பினர் எந்திலையிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 4ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரங்களை சமர்ப்பித்தார்கள். இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிட்டப்படுகின்றன.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

அரசாங்க தரப்பினருக்கும்இகூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது. நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றார்.

No comments

Powered by Blogger.