Header Ads



ஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்

- தமிழன் -

அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளால் இறுதியாக இந்தியா ஊடாக அவர் இன்று -29- இலங்கை வரவுள்ளார்.

கொழும்பு வந்தாலும் அவர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா சுகாதார கட்டுப்பாடு வழிமுறைகளின் கீழ் அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளார்.

இந்த சோகமான நிலைமையை கருத்திற்கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிப்பதா என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தினாலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தந்தையின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி தந்தையாரின் பூதவுடலை நேரடியாக காண கொரோனா நிலைமையால் ஏற்பட்டுள்ள தடை குறித்து குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக நேற்றிரவு அறியமுடிந்தது.

1 comment:

  1. Nonono for you people all easy no worry they will arrange it...
    Only the rules and low for ordinary people not for you sis...

    ReplyDelete

Powered by Blogger.