சனிக்கிழமை தலைப்பிறையை, தீர்மானிக்கும் மாநாடு
புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு சனிக்கிழமை -23- மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்ளது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112 432110, 0112451245, பெக்ஸ் 0112 390783 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே உம்மத்தினர் - ஒரே சமுதாயத்தினர் என்பதில் நாம் உறுதியாக இருக்கவும், எமது ஒற்றுமையையும் அதனூடாக எமது சகோதரத்துவத்தையும் மேலும் உறுதி செய்து கொள்ளவும், இம்முறை இலங்கையில் ஒரே நாளில் அனைத்து முஸ்லிம்களும் பெருநாளை தத்தம் வீடுகளில் இருந்து கொண்டாட முயற்சிப்போமாக.
ReplyDeleteஎனவே, வித்தியாசமான பிறைக்கணிப்பீட்டை மேற்கொள்ளும் பேருவளை புஹாரி தக்கியா சகோதரர்கள் போன்றவர்கள், உலமா சபையின் மாநாட்டில் கலந்து கொண்டு, இது விடயமாக அவர்களோடு கலந்துரையாடி, தமது கணிப்பீட்டின் பிரகாரமோ அல்லது உலமா சபையின் கணிப்பீட்டின் பிரகாரமோ ஏதாவது ஒரே நாளைக் குறிப்பிட்டு ஓர் உடன்பாட்டுக்கு வருமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
முஸ்லிம்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்களையும், குரோதங்களையும் களைந்து, அனைவரும் அல்லாஹ்வின் முன் சமமானவர்களே என்பதை செயல்ரீதியாக ஒப்புவித்து, அல்லாஹ்வினதும் அவனது திருதூதரினதும் பொருத்தத்தை அடைந்து அவனது அருளுக்கு உரியவர்களாகவும் மாறுவோமாக!