Header Ads



மருத்துவமனையில் திருமணம் செய்த, இலங்கை மருத்துவர்


கொரோனாவால் முடிவு செய்த திருமணம், தடைபட்ட நிலையில், இலங்கை மருத்துவர் தமது காதலியை பணியாற்றும் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மத்திய லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர்கள் 34 வயது செவிலியர் ஜான் டிப்பிங் மற்றும் 30 வயது மருத்துவர் அன்னலன் நவரத்னம் ஆகியோர்.

இந்த தம்பதி தங்கள் திருமணத்தை ஆக்ஸ்டு மாதம் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், வடக்கு அயர்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து தங்கள் குடும்பத்தினர்கள் பாதுகாப்பாக லண்டன் செல்ல முடியுமா என்ற அச்சம் காரணமாக ரத்து செய்ய முடிவு செய்தனர்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் குடும்பத்தாரின் உடல் நலனே பிரதானம் என்பதால், இருவரும் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள தேவாலயத்தில் மணம் முடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ஏப்ரல் 24 ஆம் திகதி இருவரும் மிகச் சாதாரணமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி தங்கள் திருமணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரலையும் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.