Header Ads



கொழும்பிலும் கம்பஹாவிலும் ஊரடங்கு நீடிக்கும் - ஏனைய 23 மாவட்டங்களிலும் காலை 5 க்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த 23 மாவட்டங்களிலும் நாளை முதல் தொடர்ந்து காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.