சுதந்திர கட்சியின் மத்திய, செயற்குழு கூட்டம் நாளை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை -18- இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, பொருளாதார முன்னேற்றம், அரசியல் நிலவரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment