Header Ads



பாத்திமா என்ற 94 வயது மூதாட்டி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 94 வயதான பாத்திமா என்ற பெண்மணி முற்றாக குணமடைந்து கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெலிகந்தை வைத்தியசாலையில் இருந்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இந்த பெண்மணி, ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வெலிகந்தை கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போது இந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டதுடன் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த பெண்ணை குணப்படுத்த மருத்துவ ஊழியர்கள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். வயதானவர்களை கொரோனா தாக்கும் என்ற காரணத்தினால் இந்த பெண்மணி குறித்து மருத்துவ ஊழியர்கள் கூடிய கவனத்தை செலுத்தி இருந்தனர்.

குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து புறப்பட்ட பெண்மணிக்கு மருத்துவ ஊழியர்கள் பரிசுகளை வழங்கியிருந்தனர். மருத்துவ ஊழியர்களுக்கு நன்றிக் கூறி அவர் வைத்தியசாலையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.