Header Ads



அமெரிக்காவை புரட்டி எடுக்கும் கொரோனா, 80 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 80 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், அந்நாட்டில் புதிதாக ஆயிரத்து 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.