Header Ads



அறிகுறிகள் தென்படாத 80 வீதமான கொரோனா, நோயாளிகள் சமூகத்தில் இருக்கலாம் - Dr ஜயருவான்

கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத 80 வீதமான நோயாளிகள் சமூகத்தில் ஆங்காங்கே இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர ஜயருவான் பண்டார எச்சரித்துள்ளார்.

இதனால், இந்த நபர்கள் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால், நோயாளிகள் மீண்டும் பெருக கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளில் 20 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை. 60 வீதமான நோயாளர்களுக்கு குறைந்தளவிலேயே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன.

இதனால், இவர்கள் மிகப் பெரிய நோய் காவிகளாக மாறக்கூடும். இவர்கள் தொடர்பாகவே கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால், வேலைகளுக்கு சென்று வரும் நபர்கள் மூலம் வீட்டுகளுக்குள் கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்பதே தற்போதுள்ள பெரிய பிரச்சினை.

இந்த நிலைமையில், வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க கட்டாயம் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.

தொழில்களுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என்பதுடன் தனி நபர் இடைவெளியை பேண வேண்டும் எனவும் ஜயருவான் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.