Header Ads



மலேசியாவிலிருந்து 178 மாணவர்கள் இலங்கையை வந்தடைந்தனர் - படங்கள்


கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் சிக்கித்  தவித்த 178 இலங்கை மாணவர்கள் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -315 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை 4.12 மணியளவில் வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்தும் மாணவர்களையும், அவர்களது பொதிகளையும் கிருமி நீக்கல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து அவர்களை இலங்கை இராணுவத்தினர் பேருந்துகள் மூலமாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



No comments

Powered by Blogger.