Header Ads



முஸ்லிம்கள்தான் கொரோனாவை கொண்டு வந்தார்கள் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு

- ஏ.எல்.தவம் -

✔️191 கொரோனா நோயாளிகளில் 6.3% மாத்திரமே முஸ்லிம்கள்
✔️கட்டாய தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் 37% மட்டுமே

இவ்விபரத்தை The Alliance of Independent Professionals என்ற அமைப்பினரின் STATUS STATEMENT III: 14 April 2020; Sri Lanka's Response to Covid-19 என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். (கீழே அறிக்கையின் குறிப்பிட்ட பகுதி இணைக்கப்பட்டுள்ளது)

இவ்வமைப்பில் மூவினத்தினரை சேர்ந்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

முஸ்லிம்கள்தான் நாட்டில் கொரோனாவை பரப்பினர் என்ற இனவாத பரப்புரைக்கு எதிரான ஆதாரத்தை அவர்கள் தமது அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளனர். இத்தோடு இந்த இனவாத பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் முஸ்லிம்களை கைவிடவில்லை. நமது பிரார்த்தனைகள் வீண்போகவில்லை.
அல்ஹம்துலில்லாஹ்

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான சிங்கள சகோதரர் ஒருவரே எனக்கு இந்த முழு அறிக்கையையும் ஈமெயில் பண்ணி இருக்கிறார். இன்னும் மனிதம் வாழ்கின்றது என்பதற்கு இவரை போன்றவர்களே அத்தாட்சி.



1 comment:

  1. MUSLIMGALTHAAN KOLUMBIL AAKA KOODIYA
    ALAVU KUPPAIKALAI, VEESHUKIRAARKAL
    ENRU MUTHAN MUTHALIL SHONNAVAN, THUVESHI CHAMPIKA RANAWAKA.
    HAKEEM, RISHAD, FOUSI, M.RAHMAN,
    IVANODUTHAAN KOOTTU SHRNDIRUKKIRAANUKAL.
    MUSLIMGALEY!!!!! KAVANAM.

    ReplyDelete

Powered by Blogger.